வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.