(ASM Irshad)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இப்றாஹிம் அன்ஸார் இன்று பிற்பகல் திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலிசப்ரி கலந்து கொண்டதுடன் பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் கலாநிதி ஹசன் மௌலானா, பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர் மற்றும் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இன்று பதவியேற்ற புதிய பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் மன்னார் எருக்கலம் பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் வெளிநாட்டு அமைச்சு உள்ளிட்ட பல அரச திணைக்களங்களில் உயர் பதவிகளை வகித்ததுடன் சவூதி அரேபியா, மலேசிய, ஓமான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இலங்கைக்கான தூதுவராகவும் கடமையாற்றியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.