மே.மா/மினு/எல்லளமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் 1 முதல் 11 வரை கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கான அப்பியாசப் புத்தகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று 23/12/2021 ம் திகதி பாடசாலையில் நடைபெற்றது.

 இப்புத்தகங்கள் எல்லலமுல்ல அபிவிருத்தி அமைப்பு (Ellalamulla Development Forum) இனால் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வு கல்லூரி அதிபர் ஜனாபா எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் எல்லலமுல்ல அபிவிருத்தி அமைப்பின் உப தலைவர் ஜனாப் M.T.M.நவ்ஷாத், செயலாளர் அஷ்ஷெய்க் ஆலிப் அலி (இஸ்லாஹி) மற்றும் ஏனைய அங்கத்தவர்களான ஜனாப்.எம்.ஸபீர் அலி, ஜனாப் எம்.ரஸான், ஜனாப் எம்.பஹத் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.