Update (2.50 PM)
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

ராகமையில் அமைந்துள்ள, தங்குமிட விடுதியில் வைத்து  களனி பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் வரையில்,  தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தி:

ராகமவில் வைத்திய பீட பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிக்கும் அத்துமீறி நுழைந்து  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஏழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்  இந்திக அனுருத்தவின் மகன், சட்டத்தரணியின் ஊடாக வெலிசர பொலிஸில் நள்ளிரவில் சரணடைந்தார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, பி.எம்.டபிள்யூ ரக வாகனம் தெஹிவளையில் வைத்து கைப்பற்றப்பட்டது. 
கைது செய்யப்பட்ட அனைவரும் வெலிசர நீதிமன்றத்தில், அடையாள அணிவகுப்புக்காக இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்

நன்றி - தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.