பைஷல் இஸ்மாயில்
அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து திருகோணமலை அலெக்ஸ் தோட்டம் பகுதியில் (21) மாபெரும் கண்டன பேரணி ஒன்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் பேரணியை மேற்கொண்டிருந்தது.
இந்தப் பேரணி திருகோணமலை அலெக்ஸ் தோட்டத்தில் இருந்து ஆரம்பித்து சர்வதே நிலையத்துக்கு முன்னால் வந்தடைந்து,
இப்பேரணியின்போது, பல்கலைக்கழகம் மாணவர்களை விடுதலை செய், அனைத்து போராட்டக்காரர்களையும் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, மனித உரிமையை அங்கீகரி என்ற பதாகைகளை ஏந்தி, கோஷங்களையும் எழுப்பினர்.