முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது குறித்து தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக் ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், முன்னாள் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன .
இதேவேளை ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் பாதுகாப்பாக இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.