துருக்கியில் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

துருக்கியின் அய்டின் மாகாணத்தில் உள்ள நசிலி மாவட்டத்தில் ஹொட்டல் ஒன்றில் எரிவாயு சிலிண்டரை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில், மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில்,மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

தீயில் இருந்த தப்பிக்க இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக குதித்த இரண்டு பேர் உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்ததுடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மாகாண ஆளுநர் அனடோலு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.