போதை வஸ்துக்களின் கொடுமையை விட பெரியப்பாவின் காம வெறியின் கொடுமை உச்சத்தை தொட்டது  - 11 மாத பச்சிளம் குழந்தை துஷ்பிரயோகம்

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குழந்தையின் தாயின் சகோதரியின் கணவனால் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாய் குழந்தையை குளிப்பாட்ட எத்தனித்த போது  பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால்  குழந்தையின் தாய் உடனடியாக  குழந்தையை வைத்திய சாலைக்கு எடுத்து சென்றுள்ளார்.

சிகிச்சைக்காக குழந்தை உட்படுத்தப்பட்ட போது  குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து போலீசாரினால்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயின் சகோதரியின் கணவனால்       ( பெரியப்பா) குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

இச் சமபவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.