tag:blogger.com,1999:blog-74954932883789910002024-03-18T15:18:33.609+05:30SiyaneNews.com | Radio | Siyane Media CircleSiyaneNews.com is a Leading Web Media in Sri lanka.Mohamed Rimzanhttp://www.blogger.com/profile/01464761480981138671noreply@blogger.comBlogger15785125tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-23992950223909788322023-12-13T22:52:00.001+05:302023-12-13T22:52:56.787+05:30வர்த்தமானியின்படி சுருக்கு வலைகளுக்கு அனுமதி பத்திரம் வழங்குங்கள்-இம்ரான் எம்.பி <div><br></div><div>வர்தமானியின்படி சுருக்கு வலைகளுக்கு அனுமதி பத்திரம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.திங்கள் இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், </div><div>சுருக்கு வலை என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன மீன்பிடி முறையாகும். ஆனால் எம் மக்கள் மத்தியில் சுருக்கு வலை என்பது தடைசெய்யப்பட்ட தொழில் என்ற கருத்து நிலவுகிறது .உண்மையில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை எது? அங்கீகரிக்கப்பட்ட சுருக்கு வலை எது என்பது பற்றி இந்த சபையில் தெளிவு படுத்தப்படலாம் என நினைக்கிறேன்.</div><div>1986 ஆம் ஆண்டு சுருக்கு வலை தொடர்பான வர்தமானி அறிவித்தலின்படி 3/8 (0.375) அங்குல கண் அளவுக்கு மேற்பட்ட சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் வழங்கப்படலாம் என உள்ளது.அந்த வர்தமானியை இங்கு சமர்ப்பிக்கிறேன். ஆகவே வர்தமானி அறிவித்தலின் படி 3/8 அங்குலத்துக்கு மேற்பட்ட கண் உள்ள வலைகள் அனைத்த்தும் சட்டரீதியான வலைகள். </div><div>ஆனால் தற்போது 1.5 அங்குல கண் அளவுக்கு மேற்பட்ட வலைகளுக்கே அனுமதி பத்திரம் வழங்கப்படுகிறது.இதனால் 1.5 அங்குலத்துக்கு குறைவான வலைகள் தடைசெய்யப்பட்ட வலைகள் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.அது தவறானது அதுபோன்று 3/8 அங்குலத்துக்கும் 1.5 அங்குலத்துக்கும் இடைப்பட்ட வலைகள் கடற்படை ,மீன்பிடி திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. </div><div>1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுருக்கு வலை தொடர்பான திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுருக்கு வலையை அனுமதி பத்திரம் இல்லாமல் யாரும் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளதை காரணம் காட்டி வர்தமானியின் படி அனுமதி வழங்கப்பட்ட சட்டரீதியான சுருக்குவலை மீன்பிடி திணைக்களத்தால் அனுமதி பத்திரம் வழங்கப்படாததால் மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் 13 இலட்சம் பெறுமதியான வலைகள் எரிக்கப்பட்டு அவர்களும் வழக்குகளுக்காக நீதிமன்றத்துக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. </div><div>உண்மையில் வர்தமானி மூலம் அனுமதி வழங்கப்பட்ட வலைகளுக்கு அனுமதி பத்திரம் வழங்காதது யாரின் தவறு இது மீனவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.ஆகவே இது தொடர்பாக அமைச்சர் உரிய தெளிவுபடுத்தலை மேற்கொள்ள வேண்டும்.</div><div>அத்துடன் 1.5 அங்குல சுருக்கு வலைகளுக்கான அனுமதி பத்திரத்தில் சில நிபந்தனைகள் உள்ளன.உண்மையில் அவை திருகோணமலைக்கு பொருத்தமில்லாத நிபந்தனைகளாகவும் காணப்படுகின்றன.7 கடல் மைல்களுக்கு அப்பால் சென்றே மீன் பிடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.இந்த நிபந்தனை விதிக்க காரணம் தென் பகுதியில் ஏழு மைல்களுக்கு உள்ளே அதிக முருகை கற்பாறைகள் காணப்படுவதால் சுருக்கு வலை மூலம் அவை அழிவடைவதே தடுப்பதற்காக. </div><div>ஆனால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமையில் 7 மைல்களுக்கு உள்ளே அவ்வாறான முருகைக்கற்பாறை இல்லை அத்துடன் 1.5 அங்குல சுருக்கு வலை அலகொடுவா எனப்படும் சூறை மீன் பிடிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது.பாறைகளில் உள்ள மீன்களை பிடிப்பதற்கு இவை பயன்படுத்தப்படுவதில்லை. </div><div>உண்மையில் ஏழு மைல் என்பது திருகோணமலை யை பொறுத்தவரை நடைமுறை சாத்தியம் அற்றது. ஏன் எனில் கிண்ணியாவில் இருந்து ஏழு கடல் மைல் என்பது திருகோணமலையில் இருந்து மூன்று மைல்களாக இருக்கும். ஒருவர் கிண்ணியாவில் இருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் மீன் பிடிக்க செல்லும் போது அவர் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்.ஆகவே திருகோணமலையின் பூகோல அமைப்பை கருத்தில் கொண்டு இந்த எல்லையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.</div><div>அடுத்த நிபந்தனையாக வலையின் நீளம் 225 m உயரம் 25 M என, குறிப்பிடப்பட்டுள்ளது.உண்மையில் 225m வலையை பயன்படுத்தி சூறை மீனை பிடிக்க முடியாது.அவ்வாறு 225m வலையை பயன்படுத்தி சூறை மீன் பிடிக்க முடியும் என மீன்பிடி திணைக்கலாமோ NARA வோ கூறினால் அனுமதி பத்திரம் வழங்க முதல் அவர்கள் முதலில் திருகோணமலைக்கு வந்து அவர்கள் கூறும் வலையில் 100 கிலோ சூறை மீனை பிடித்து காட்டிவிட்டு இந்த நிபந்தனைகளை விதிக்கட்டும்.</div><div>இவ்வாறு நடைமுறை சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை விதித்து மீனவர்களை கைது செய்து அவர்களின் உடமைகளை அழிக்க இடமளிக்க வேண்டாம் என நான் கோரிக்கை விதிக்கிறேன்.</div><div>2019 ஆம் ஆண்டு முதல் இரவில் சுழியோடி (Diving) அட்டை பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.உண்மையில் பகல் நேரங்களில் அட்டைகளை பிடிக்க முடியாது. அத்துடன் அட்டை ஏற்றுமதி நாட்டுக்கு டொலர் வருமானத்தை பெற்று தரும் துறையாகும்.ஆகவே எவ்வித விஞ்ஞான காரணமும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரம் மீண்டும் வழங்கப்பட தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhayKqZpnxTHuVpomaznbfYa_JvM4oQ-0pEzwMAMKZCFFQ_ac40KXSw2urGBQqFuzk64_BycDeDVCNu0O-c9Rw1fpS8JS0oCslh1H16Mjlc1ig_HQTy_WBL5Bcri41oEQ-1IrMf4BQFO04u2Zz3XjxxbgugYIkvnTgO9rLSKxfo2AHe2Y2iGDhcY61poFo" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhayKqZpnxTHuVpomaznbfYa_JvM4oQ-0pEzwMAMKZCFFQ_ac40KXSw2urGBQqFuzk64_BycDeDVCNu0O-c9Rw1fpS8JS0oCslh1H16Mjlc1ig_HQTy_WBL5Bcri41oEQ-1IrMf4BQFO04u2Zz3XjxxbgugYIkvnTgO9rLSKxfo2AHe2Y2iGDhcY61poFo" width="400">
</a>
</div><br></div> Fayasa Fasil http://www.blogger.com/profile/17170314237747338420noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-82958441584690239582023-09-26T21:50:00.000+05:302023-09-26T21:51:59.608+05:30தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் கிடைத்த பலன் ; இரு வருடங்களுக்கு பிறகு போட்டிப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்ட நீதிச்சேவை ஆணைக்குழு <div> </div><div><br></div><div><br></div><div>- ரிஹ்மி ஹக்கீம் -</div><div>கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. </div><div><br></div><div>குறித்த பரீட்சையானது கொழும்பில் மாத்திரமே நடைபெற்றது. 2021 இல் நாட்டின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கும் போது நடைபெற்ற இப்பரீட்சையில் வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்கள் உட்பட கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பிரதேசங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் தோற்றினார்கள்.</div><div><br></div><div>பரீட்சார்த்திகள் பலர் தங்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் வந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, விசேட வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் சென்று ஐந்து மணி நேர பரீட்சையை பரீட்சார்த்திகள் எழுதியிருந்தனர்.</div><div><br></div><div>இவ்வாறு பரீட்சை 2021 இல் நடைபெற்ற போதும் நீண்ட நாட்களாக பெறுபேறுகள் வெளிவராததால் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாம் நீதிச்சேவை ஆணைக்குழுவை தொடர்பு கொண்ட போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. </div><div><br></div><div>மேலும் 2023 ஆம் வருடம் ஆரம்பமானதை தொடர்ந்தும் பெறுபேறுகள் வெளியாகவில்லை என்பதால் பெறுபேறுகள் எப்போது வெளிவரும், தாமதத்திற்கான காரணம் என்ன என்று வினவிய போது தெளிவான பதில் எமக்கு கிடைக்கவில்லை. </div><div>2023 ஜூன் மாதமாகியும் பெறுபேறுகள் வெளிவராத காரணத்தால் அது தொடர்பில் தகவல் பெறுவதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் 2023 ஜூன் 21 ஆம் திகதி விண்ணப்பம் ஒன்றை அனுப்பினோம். </div><div><br></div><div>RTI விண்ணப்பத்திற்கு 14 நாட்களுக்குள் அரச நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். ஆனால் நீதிச்சேவை ஆணைக்குழு நாம் விண்ணப்பித்து ஒரு மாத காலமாகியும் பதிலளிக்காத காரணத்தால் அதன் தகவல் அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது எமது விண்ணப்பம் தொடர்பில் இவ்வார இறுதியில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.</div><div><br></div><div>எனினும் தொடர்ந்தும் பதில் எதுவும் கிடைக்காததால், ஜூலை 31 ஆம் திகதி மேன்முறையீட்டு விண்ணப்பத்தை (RTI 10) நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பினோம். </div><div>அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 03 ஆம் திகதி, எனது விண்ணப்பம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டது. </div><div><br></div><div>அதாவது முதலில் அனுப்பிய விண்ணப்பத்திற்கு 14 நாட்களுக்குள் வழங்க வேண்டிய பதில் 44 நாட்களுக்கு பிறகே எமக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஆணைக்குழுவின் தகவல் அதிகாரியை தொடர்பு கொண்ட போது, ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லை எனவும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே நியமனங்கள் வழங்கப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.</div><div><br></div><div>எவ்வாறாயினும், ஒரு பிரஜையால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு உரிய காலத்திற்குள் பதிலளிப்பது சகல அரச நிறுவனங்களினதும் கடமையாகும். நாம் அடுத்த கட்டமாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்ய இருந்தோம் எனவும் தெரிவித்தோம்.</div><div>எனினும் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளிவரலாம் எனவும் தகவல் அதிகாரி தெரிவித்தார். </div><div><br></div><div>அதற்கிடையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடமும் எமது கோரிக்கையினை முன்வைத்தோம். எனினும் அவரிடமிருந்து பதில் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.</div><div>இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (21) முதல் பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு கிடைக்கப்பெற்று வருவதை எம்மால் அறியக்கூடியதாக உள்ளது. </div><div>அதனடிப்படையில் சுமார் இரு வருடங்களுக்கு முன்பு நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.</div><div><br></div><div>எனினும் மொழிபெயர்ப்பு பாடத்தில் சித்தி பெறுவதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய குறைந்த பட்ச புள்ளிகள் மற்றும் வெட்டுப்புள்ளி விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை. எத்தனை பேருக்கு நியமனம் வழங்குவது என்று ஆணைக்குழு தீர்மானம் எடுத்த பின்னர் வெட்டுப்புள்ளி விபரம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</div><div>எனினும் வெட்டுப்புள்ளி விபரம் வெளிவராமை காரணமாக நியமனம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.</div><div><br></div><div>பெறுபேறுகள் வெளியாகியமை எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இது போன்ற பல விடயங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும் என்பதற்கு இது முக்கியவொரு எடுத்துக்காட்டாகும்.</div><div>நாட்டில் ஏற்கனவே பல்வேறு திறந்த போட்டிப்பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தாலும் இரு வருடங்களுக்கும் மேலாக சில பரீட்சைகள் நடாத்தப்படவில்லை (உ+ம் : முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தெரிவுக்கான பரீட்சை) என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும். </div><div><br></div><div>அது தொடர்பில் தேவையுடைய தரப்பினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி உரிய தகவலை கோரலாம். அதன்மூலம் சிறந்தவொரு முடிவு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.</div><div>உரிமையுடன் தகவல் அறிவோம்</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhlfSfOgh0B-T4yCUL573VurZMbfUnSNvzJXfdEYLPZ75Qxv40RzvTEdlsyAN9kumDCtb-G2LgqYyttbf-009TEDEh0Vi1xl06wlxMtqqld2fcGOH982m8yGeoptjMLqqe2scH7fTjmqJkiHT9AJ_O4gIXRiJG5IYhf897ecb6U8UuDhsBtbGXuo6XtazA" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhlfSfOgh0B-T4yCUL573VurZMbfUnSNvzJXfdEYLPZ75Qxv40RzvTEdlsyAN9kumDCtb-G2LgqYyttbf-009TEDEh0Vi1xl06wlxMtqqld2fcGOH982m8yGeoptjMLqqe2scH7fTjmqJkiHT9AJ_O4gIXRiJG5IYhf897ecb6U8UuDhsBtbGXuo6XtazA" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiSKHfSHyYVpwY2de1WIesOOnrbMilRTkbunvJhPcJzwhFJtWkfLKz_83oa5gjZKCeR6IjewnQAlu-vfoU6ysoBgwfqTBAem1UaXjWV0W7nknxx9wUGNLyxeH7Q7kJ68YGry6UqnJiEDFM3BHXWCWJ9ZDxFXg9epYa-w2Jssq_THHY-Tl5p7hoiYzwqay8" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiSKHfSHyYVpwY2de1WIesOOnrbMilRTkbunvJhPcJzwhFJtWkfLKz_83oa5gjZKCeR6IjewnQAlu-vfoU6ysoBgwfqTBAem1UaXjWV0W7nknxx9wUGNLyxeH7Q7kJ68YGry6UqnJiEDFM3BHXWCWJ9ZDxFXg9epYa-w2Jssq_THHY-Tl5p7hoiYzwqay8" width="400">
</a>
</div><br></div> Fayasa Fasil http://www.blogger.com/profile/17170314237747338420noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-90483453831075486852023-09-26T07:35:00.001+05:302023-09-26T07:35:21.063+05:30எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2023<div><br></div><div><br></div><div>தெல்தோட்டை எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர்களை கல்லூரியுடன் இணைக்கவும் அவர்களின் மூலம் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்வரும் 28, 29 மற்றும் 30ம் திகதிகளில் தெல்தோட்டை மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. எனசல்கொல்ல பிறீமியர் லீக் - 2023 என்ற பெயரில் இடம்பெறும் இப்போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் செப்டெம்பர் மாதம் 27ம் திகதி புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற உள்ளது. </div><div><br></div><div>ஒன்றிணைவோம் பலம்பெறுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற உள்ள இந்த சுற்றுப் போட்டித் தொடர்பில் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjCGTrcwuS31LeVPEWrBnGT8XRJsyz48YqU_bHwkFE--BNfLpWrAoGNaeZkGsv59NVKDpOYDc_CwcRKbgzB0dxzJ5wngbrFpZeRHzLViEqPxc30VKB5-P1r1fLhYpCl-3qXmxje9DPcD5-zyz3ITu4cP-uasLFqa5toUJpfbroNyrWCpzIQqtKm6leSxpc" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjCGTrcwuS31LeVPEWrBnGT8XRJsyz48YqU_bHwkFE--BNfLpWrAoGNaeZkGsv59NVKDpOYDc_CwcRKbgzB0dxzJ5wngbrFpZeRHzLViEqPxc30VKB5-P1r1fLhYpCl-3qXmxje9DPcD5-zyz3ITu4cP-uasLFqa5toUJpfbroNyrWCpzIQqtKm6leSxpc" width="400">
</a>
</div><br></div> Fayasa Fasil http://www.blogger.com/profile/17170314237747338420noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-87435486619507032232023-09-18T18:44:00.001+05:302023-09-18T18:44:07.427+05:30தேசிக்காய் விலை சடுதியாக அதிகரிப்பு!<div><br></div><div><br></div><div>இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</div><div><br></div><div>மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.</div><div><br></div><div>இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக பதிவாகியுள்ளது.</div><div><br></div><div>ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்றைய தினத்தில் 2000 கிலோகிராம் தேசிக்காய் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-5749291676418648922023-09-18T18:42:00.003+05:302023-09-18T18:42:58.872+05:30மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த நடவடிக்கை!<div><br></div><div><br></div><div>இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</div><div>குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.</div><div>இதற்கான முதற்கட்ட தரவு சேகரிப்பு பணிகள் அடுத்தமாதம் மேற்கொள்ளப்படுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.</div><div>கனேடிய அரசாங்கத்தின் உதவியுடன் பல்வேறு முகவர் நிலையங்கள் மற்றும் சர்வதேச மையத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</div><div>இதன்படி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கரு, தாய் மற்றும் குழந்தைக்கும் ஏற்படும் சிக்கல்களை வைத்தியர்களினால் எதிர்காலத்தில் கணிக்க முடியுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-21411524858570417962023-09-18T18:42:00.001+05:302023-09-18T18:42:15.821+05:30வெலிகமவை சூழவுள்ள கடற்பரப்பில் நிறமாற்றம்!<div><br></div><div>வெலிகமவை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் இயற்கையான நிறம் கரும்பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அசாத்திய அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</div><div>கடல் அலைகளின் இந்த திடீர் மாற்றத்தால் மக்கள் மத்தியில் பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.</div><div>இந்நாட்களில் மழை பெய்வதால் ஆறுகளின் தோற்றம் மாறி பாசிகள் பெருகி வருவதால், கடல் அலைகளின் நிறத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகே தெரிவித்துள்ளார்.</div><div>எனினும், நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், எனவே யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-34758592431025202092023-09-18T18:40:00.001+05:302023-09-18T18:40:47.886+05:30நிதி ஒதுக்கீடுகளை செய்ய திறைசேரியுடன் பேச்சுவார்த்தை...<div>➡️ மினுவாங்கொடை நகரத்தை வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தூங்காத நகரமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள்...</div><div>➡️ நகரை அபிவிருத்தி செய்யும் போது நகரத்தில் உள்ள வயல் நிலங்கள் உள்ளிட்ட இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கவும்...</div><div>➡️ மினுவாங்கொடை நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அம்பகஹவத்த பகுதியில் இருந்து விமான நிலையம் வரை புதிய பாதை அமைக்கப்படும்...</div><div>➡️ தனியார் மருத்துவமனைகள், வாகன நிறுத்துமிடங்கள், புதிய வணிக வளாகங்கள், அரங்கங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவையும் கட்டப்பட்டு வருகின்றன.</div><div>➡️ நிதி ஒதுக்கீடுகளை செய்ய திறைசேரியுடன் பேச்சுவார்த்தை...</div><div> - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க</div><div><br></div><div>மினுவாங்கொடை நகரத்தை வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தூங்காத நகரமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.</div><div><br></div><div>நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மினுவாங்கொட நகரத்தை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.</div><div><br></div><div>பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (14) மினுவாங்கொடை நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</div><div>நூறு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மினுவாங்கொடை நகரம் ஏற்கனவே அழகுபடுத்தப்பட்டது.</div><div><br></div><div>மினுவாங்கொடை நகர அபிவிருத்தித் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டயப் பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. நகர அபிவிருத்தியின் போது நகரில் உள்ள வயல் நிலங்கள் உள்ளிட்ட இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.</div><div><br></div><div>கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ளதால் இந்த நகரத்தின் வர்த்தக மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.</div><div><br></div><div>எனவே, நகரத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, வர்த்தகப் பெறுமதியை அதிகரிக்கும் வகையில், கலப்பு அபிவிருத்தித் திட்டமாக மினுவாங்கொடை நகர அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.</div><div><br></div><div>மினுவாங்கொடையை தவிர்த்து மிக இலகுவாக விமான நிலையத்தை அடையும் வகையில் மினுவாங்கொடைக்கு அருகில் உள்ள அம்பகஹவத்த பகுதியிலிருந்து விமான நிலையம் வரை புதிய வீதியொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</div><div><br></div><div>அங்கு மினுவாங்கொடை நகரின் அபிவிருத்திக்காக ஒன்பது ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</div><div><br></div><div>அதன்படி, தனியார் மருத்துவமனைகள், வாகன நிறுத்துமிடங்கள், புதிய வணிக வளாகங்கள், அரங்கங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றைக் கொண்டு நகரை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.</div><div><br></div><div>மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கு உட்பட்டு, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு காணியை சுவீகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மேல் மாகாண ஆளுநர், விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவிடம் தேவையான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.</div><div><br></div><div>மேலும், நகரின் வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நீதித்துறை நடவடிக்கை விரைந்து எடுக்கும் என்றார்.</div><div><br></div><div>மினுவாங்கொடை நகர சபையின் தற்போதைய நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நகர அபிவிருத்திக்கான அடிப்படைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கிய அமைச்சர், தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.</div><div><br></div><div>இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி, பிரதி பணிப்பாளர் நாயகம் லலித் விஜேரத்ன, மினுவாங்கொடை நகர சபையின் முன்னாள் தலைவர் நீல் ஜயசேகர மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</div><div><br></div><div>முனீரா அபூபக்கர் <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-S0dv5T5RzDI/ZQhMTUOOydI/AAAAAAAAMJ4/LsuJ_Sffujc1pPsrNG4z2S7zpPmWhJVNACNcBGAsYHQ/s1600/1695042635370256-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-S0dv5T5RzDI/ZQhMTUOOydI/AAAAAAAAMJ4/LsuJ_Sffujc1pPsrNG4z2S7zpPmWhJVNACNcBGAsYHQ/s1600/1695042635370256-0.png" width="400">
</a>
</div> </div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-18996007490518840272023-09-18T18:39:00.001+05:302023-09-18T18:39:00.768+05:30தனி நபர் தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை அபிவிருத்தியை செய்ய முடியாது<div>➡️ நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை முறைப்படி அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டத்திற்கு மேல் மாகாண சபையின் அங்கீகாரம்...</div><div>➡️ திட்டம் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது…</div><div>➡️ அபிவிருத்தித் திட்டத்திற்கு பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர; சங்கம், பாடசாலை முகாமைத்துவக் குழு ஆகியவற்றின் அங்கீகாரம்.</div><div>➡️ கம்பஹா மாவட்டத்தின் கல்வி வலயத்தின் மினுவாங்கொடையில் உள்ள 3 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது...</div><div>➡️ தனி நபர் தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை அபிவிருத்தியை செய்ய முடியாது...</div><div>➡️ பாடசாலைகளின் அபிவிருத்தியின் பின்னர், மாகாணத்தின் சுகாதார நிலையத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகின்றது...</div><div> </div><div> அமைச்சர் பிரசன்ன ரணதுங்க</div><div><br></div><div><br></div><div>நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை முறையாக அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டத்திற்கு மேல் மாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</div><div><br></div><div>நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டது.</div><div><br></div><div>பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்கு முன்னர் மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவின் அனுமதி பெறப்பட்டது. </div><div><br></div><div>நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள மேல்மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.</div><div><br></div><div><br></div><div>கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.</div><div><br></div><div>ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த அபிவிருத்தித் திட்டம் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</div><div><br></div><div>கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளின் கட்டிடங்கள் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த கட்டிடங்களை முழுமையாக புனரமைப்பதற்கு பாடசாலைகளிடமோ அல்லது வலயக் கல்வி அலுவலகங்களிடமோ பணம் இல்லை. எனவே, கட்டிடத்தை ஒரு சிறிய அளவிற்கு தற்காலிகமாக புனரமைப்பது மட்டுமே பெரும்பாலும் அவசியமானதாகும்.</div><div><br></div><div>இந்நிலை பற்றி கவனத்தில் எடுத்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் முறையாக ஆய்வு செய்து அந்த பாடசாலைகளின் அபிவிருத்திக்கான திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார்.</div><div><br></div><div>அதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டய பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் நான்கு மாத காலமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சென்று இந்த அபிவிருத்தி திட்டத்தை தயாரித்துள்ளனர்.</div><div>பாடசாலையின் ஆபத்தான கட்டிடங்களை அகற்றி பாடசாலையின் தேவைக்கேற்ப கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>கம்பஹா கல்வி கோட்டத்தில் 24 பாடசாலைகளையும் மினுவாங்கொடை கல்வி கோட்டத்தில் 34 பாடசாலைகளையும் இலக்கு வைத்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.</div><div><br></div><div>அதன் பின்னர், பாடசாலைகளுக்கு அடிப்படை அபிவிருத்தித் திட்டம் வழங்கப்பட்டு, பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், பழைய மாணவர; சங்கங்கள், பாடசாலை முகாமைத்துவக் குழுக்களுடனான கலந்துரையாடலுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.</div><div><br></div><div>மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.</div><div><br></div><div>நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.</div><div><br></div><div>அனைத்து அரசு நிறுவனங்களும் அடிப்படை அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். அது அரசின் தேவையாக மாறியுள்ளது. எனவே, இந்த அபிவிருத்தித் திட்டம் கல்விக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.</div><div><br></div><div>பொதுவாக, தனியார் துறையின் பங்களிப்பில் இதுபோன்ற அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்கும்போது, நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு கம்பஹா மற்றும் மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகங்களின் பாடசாலைகளில் இது ஆரம்பிக்கப்பட்டது.</div><div><br></div><div>ஆனால் இதனை விரிவுபடுத்தும் உரிமை மாகாண ஆளுநர் உள்ளிட்ட மாகாண சபைகளுக்கு உள்ளது. எனவே இத்திட்டத்தை முன்னெடுப்பதில் மாகாண பொறியியல் அலுவலகம், வலயக் கல்வி அலுவலகம், திட்டமிடல் பணிப்பாளர்கள் ஈடுபட வேண்டும்.</div><div><br></div><div><br></div><div>மேலும் இந்த அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில், திட்டத்தை செயல்படுத்த நமது பாடசாலை – நாமே பாதுகாப்போம். அப்போது பணம் வீணாகாது. அபிவிருத்தி நடவடிக்கைகள் தனி நபர் தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தியை செய்ய முடியாது. இதுவே இந்த அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.</div><div><br></div><div>கல்வி நிலையத்தின் அபிவிருத்தியின் பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள சுகாதார நிலையத்தின் அபிவிருத்திக்காக இவ்வாறான அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு வலியுறுத்தினார்.</div><div><br></div><div>இந்த நிகழ்வில் மேல்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொகுவிதான, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மகிந்த விதானாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்களான லாவண்யா வீரசூரிய, இந்திகா பாலசூரிய, மினுவாங்கொடை வலயக் கல்வி பணிப்பாளர் கபில ரணராஜா பெரேரா, கம்பஹா வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.ஏ பிரேமலால் உட்பட அதிகாரிகள் குழு கலந்துகொண்டது.</div><div><br></div><div>முனீரா அபூபக்கர் <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-DLw6InGdruY/ZQhL6ozSY6I/AAAAAAAAMJw/4auIaCMFtFMC6YEDcIlciD7-FUyckxeDQCNcBGAsYHQ/s1600/1695042537016135-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-DLw6InGdruY/ZQhL6ozSY6I/AAAAAAAAMJw/4auIaCMFtFMC6YEDcIlciD7-FUyckxeDQCNcBGAsYHQ/s1600/1695042537016135-0.png" width="400">
</a>
</div> </div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-10233178168571233452023-09-18T18:37:00.001+05:302023-09-18T18:37:36.779+05:30நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்க ஜனாதிபதியிடம் 13 அவசர யோசனைகள்<div>➡️ நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்க ஜனாதிபதியிடம் 13 அவசர யோசனைகள்...</div><div>➡️ இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் கட்டுமானத் தொழிலை மேம்படுத்தும் கொள்கைகள்...</div><div>➡️ நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 20% பேர் கட்டுமானத் தொழிலை நம்பியிருக்கிறார்கள்...</div><div>➡️ கட்டுமானத் தொழில் வீழ்ச்சியடைந்தால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1/5 பேரின் வாழ்க்கை முடக்கப்படும்...</div><div> - செயலாளர், நகர அபிவிருத்தி. மற்றும் வீடமைப்பு அமைச்சு</div><div><br></div><div>நிர்மாணத்துறையில் ஏறட்டுள்ள பின்னடைவை தவதற்கு தேவையான 13 அவசர யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த தெரிவித்தார். இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின்படி, நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான கொள்கைகள் அமைச்சின் செயலாளரினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. </div><div><br></div><div>அதன்படி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் கட்டுமானத் தொழிலை மேம்படுத்த தேவையான கொள்கைகள் அறிமுகப்படுத்தபடும் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகின்றார்.</div><div><br></div><div>இந்த நாட்டின் மக்கள் தொகையில் 20% பேர் கட்டுமானத் தொழிலை நம்பி உள்ளனர். எப்படியாவது நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் மொத்த சனத்தொகையில் 1/5 பேரின் வாழ்க்கை முடக்கப்படும் என அமைச்சின் செயலாளர் வலியுறுத்துகின்றார். </div><div><br></div><div>சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்களின் கட்டுமான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான களுத்துறை மாவட்ட ஆலோசனை சேவைகள் நடமாடும் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்துகொண்ட போதே அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி களுத்துறை தொடங்கொட பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. </div><div><br></div><div>இந்நாட்டில் நிர்மாணத்துறையை உயர்த்துவதற்கு தேவையான பணிகளை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது செய்து வருவதாகவும், நிர்மாணத்துறையை உயர்த்துவதற்கு தேவையான நிதி மற்றும் நிதி அல்லாத தீர்வுகளை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.</div><div><br></div><div><br></div><div>நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA) மற்றும் தேசிய கட்டுமான சங்கம் ஆகியவை இணைந்து இந்த ஆலோசனை சேவையை ஏற்பாடு செய்தன.</div><div><br></div><div>மேலும் கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் கூறியதாவது:</div><div><br></div><div>“இந்த நாட்டில் கட்டுமானத் துறைக்கு பொறுப்பான ஒரே அமைச்சரவை அமைச்சு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மட்டுமே. கடந்த காலங்களில் நிர்மாணத்துறை தொடர்பில் ஆராய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் 6 பிரதான குழுக்களை ஜனாதிபதி நியமித்தார். குழுக்கள் கூடி இதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து ஆலோசித்தன. அதற்கு ஜனாதிபதி, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் ஆதரவு கிடைத்தது. இதன்படி, நாட்டில் நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய 50 முன்மொழிவுகளை அடையாளம் காண முடிந்தது. இதில் 13 முன்மொழிவுகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் என ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனவே, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கட்டுமானத் துறையை புதிய திசையில் திருப்புவதற்குத் தேவையான கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என நம்புகிறோம்" எனக் கூறினார். </div><div><br></div><div>உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அவர்களை பலப்படுத்துவதே இந்த நடமாடும் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.</div><div><br></div><div>இலங்கையின் நிர்மாணத் துறையின் ஒழுங்குபடுத்துபவர் என்ற வகையில், 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாண கைத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந்தக்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதைக் கையாள்கிறது.</div><div><br></div><div>நாட்டின் பொருளாதாரத்தில் தொழில்துறை முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கட்டுமானத் தொழில் கடந்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நம்நாட்டு கட்டுமான ஒப்பந்ததாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்த ஆலோசனை நிகழ்ச்சி மாவட்ட அளவில் இலவசமாக நடத்தப்படுகிறது.</div><div><br></div><div>அதே நேரத்தில், நிர்மாணக் கைதொழில் அபிவிருத்தி அதிகாரசபை கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறமையான கட்டுமான கைவினைஞர் அடையாள அட்டையை வழங்க பதிவு செய்தது. </div><div><br></div><div><br></div><div>களுத்துறை மேலதிக மாவட்ட செயலாளர் திலங்கா வெத்தசிங்க, தொடங்கொட உதவி பிரதேச செயலாளர் அனிஷா ஷிரோமலா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (பொறியியல் சேவைகள்) வஜிரா அபேவர்தன, தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் டேரின்டன் போல், நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர். எச். ருவினிஸ், பணிப்பாளர் நாயகம் எஸ்.கே.எஸ். அமரசேகர, நிறைவேற்றுப் பணிப்பாளர் ட்ரெவின் பெர்னாண்டோ, பணிப்பாளர் சந்திமா கருணாரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</div><div><br></div><div>முனீரா அபூபக்கர்</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-S4GkqQ4A6fU/ZQhLlqmyjhI/AAAAAAAAMJk/jgY865Om7moGm9EhcS-DcZcElc4ycMsmACNcBGAsYHQ/s1600/1695042452775810-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-S4GkqQ4A6fU/ZQhLlqmyjhI/AAAAAAAAMJk/jgY865Om7moGm9EhcS-DcZcElc4ycMsmACNcBGAsYHQ/s1600/1695042452775810-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-LEB9yn_EKbg/ZQhLkSV5uZI/AAAAAAAAMJg/StDjuqIYxi0gzqNmzgCx389esDzqmL-7wCNcBGAsYHQ/s1600/1695042447813883-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-LEB9yn_EKbg/ZQhLkSV5uZI/AAAAAAAAMJg/StDjuqIYxi0gzqNmzgCx389esDzqmL-7wCNcBGAsYHQ/s1600/1695042447813883-1.png" width="400">
</a>
</div><br></div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-36276709872970439672023-09-18T18:34:00.001+05:302023-09-18T18:34:22.035+05:30கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்பு - 10 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்<div><br></div><div>மத்திய மாகாண கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களை மாகாண கல்வி அமைச்சு திடீர் இடமாற்றம் செய்துள்ளது.</div><div><br></div><div>பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என மத்திய மாகாண கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்களையே மாகாண கல்வி அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது.</div><div><br></div><div>கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் சிலர் சுற்றறிக்கைக்கு எதிராக மேலதிக வகுப்புகளை நடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து மாகாண கல்வி செயலாளர் மேனகா ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</div><div><br></div><div>பாடசாலை மட்டத்தில் வினாத்தாள்களை தயாரித்து நடத்தப்படும் தவணை பரீட்சைகளில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தங்களிடம் மேலதிக வகுப்புகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு அதிக புள்ளிகளை வழங்குவதாகவும், பாடசாலை வகுப்புகளில் அவர்களுக்கு சார்பாக நடந்து கொள்வதாகவும் வருகை தராத பிள்ளைகளின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கல்வி அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</div><div><br></div><div>தற்போது, மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்படும் தவணைப் பரீட்சை வினாத்தாள்களை அடுத்த வருடம் முதல் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</div><div><br></div><div>இவ்வாறான ஒரு சில ஆசிரியர்களின் பாரபட்சமான நடத்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-35058095433594695852023-09-18T18:32:00.001+05:302023-09-18T18:32:47.241+05:30மாதாந்தம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போக்குவரத்து சபை<div><br></div><div><br></div><div>நாட்டில் மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.</div><div><br></div><div>இதனால் அவர்களுக்கு பதிலாக புதிய நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.</div><div> </div><div>மேலும் தெரிய வருகையில், பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.</div><div><br></div><div>இதன் காரணமாக பேருந்து நடத்துனர்கள் 381 பேரையும் சாரதிகள் 912 பேரையும் புதிதாக சேவையில்,</div><div><br></div><div>இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-28855028469852931272023-09-18T18:31:00.001+05:302023-09-18T18:31:21.228+05:30இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை<p>ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது.</p><p>இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான புரவெசி பலய அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.</p><p>இறுதிப் போட்டியில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை பலமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>போட்டியை காட்டிக்கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில், இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.</p><p>இதுவே, இதுவரை இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி அல்லது வேறு எந்த அணியும் பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-87484850478558174942023-09-18T18:29:00.003+05:302023-09-18T18:29:39.876+05:30புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா..!!<div><br></div><div>▪️விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று (17) ஏவியது.</div><div><br></div><div>▪️இந்த செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும், யோகன் (Yaogan) 39 லோங் மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் 12:13 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) ஏவப்பட்டது மற்றும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-45608006947780644482023-09-18T18:29:00.001+05:302023-09-18T18:29:09.125+05:30சாய்ந்தமருதில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்<div><br></div><div><br></div><div>▪️சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்து செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாராங்கற்களை கொண்டு வீதிகளை மறித்து வைத்திருப்பதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக தெரிவித்தும் சாய்ந்தமருது மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் சாலை மறியல் போராட்டத்தில் இன்று (18) காலை முதல் ஈடுபட்டனர். </div><div><br></div><div>▪️கரையோரம் பேணல் திணைக்களம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பாராங்கற்களை சாய்ந்தமருது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் தேக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.</div><div><br></div><div><br></div><div>▪️இதனால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் இருப்பதாகவும் மீனவர்கள் போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.</div><div><br></div><div><br></div><div><br></div><div>▪️மேலும், மீன்பிடி வள்ளங்களை கரைக்கு இழுத்து வைக்க முடியதளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளமையால் உடனடியாக கடலரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கரையோரம் பேணல் திணைக்களம் துரிதப்படுத்துமாறும் மீனவர்கள் கேட்டுக்கொண்டனர். </div><div><br></div><div><br></div><div><br></div><div>▪️கரையோரம் பேணல் திணைக்கள அசமந்த போக்கினால் மீனவர்கள் தொடர்ந்தும் காயமுற்றுவருவதாகவும் மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாராங்கற்களை வைத்திராது உடனடியாக வேலைகளை துரிதப்படுத்துமாறும் போராட்ட களத்தில் கோஷங்கள் எழுந்தது. வீதிகளை இடைமறித்து மீன்பிடி வளங்களை நிறுத்தி வைத்திருந்தமையால் இலங்கையின் முக்கிய மீன்வியாபார சந்தையை கொண்டிருக்கும் இந்த பிரதேசத்தில் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த வாகனங்கள் அரை மணித்தியாலமளவில் தரித்து நிற்க நேரிட்டது. </div><div><br></div><div><br></div><div><br></div><div>▪️களத்திற்கு விஜயம் செய்த சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான சாய்ந்தமருது பொலிஸார் அங்கிருந்த கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர் ஏ.எம். நுஸ்ரத் அலியிடமும், மீனவர்களிடமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இணக்கமான நிலையை உருவாக்கி நிலையை சீர்செய்ததுடன் போக்குவரத்தையும் சீர் செய்தனர்.</div><div><br></div><div><br></div><div><br></div><div>▪️இந்த பிரச்சனை வாக்குறுதியளிக்கப்பட்டவாறு முடிவுக்கு கொண்டு வரப்படாமல் விட்டால் பெரியளவில் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். களத்திற்கு விஜயம் செய்த சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு விடயங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-6635176586861872962023-09-18T18:28:00.001+05:302023-09-18T18:28:33.321+05:30அதிவிசேட வர்த்தமானி வெளியீடு<div><br></div><div>▪️ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</div><div><br></div><div>▪️மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.</div><div><br></div><div><br></div><div><br></div><div>மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகள்.</div><div><br></div><div><br></div><div>கனிய எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம்.</div><div><br></div><div><br></div><div><br></div><div>வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு ஆகியவை இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-32365389486081660232023-09-18T18:27:00.003+05:302023-09-18T18:27:53.428+05:30சீமெந்து விலை அதிகரிப்பு<div><br></div><div><br></div><div>▪️சீமெந்தின் விலை குறிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</div><div><br></div><div>▪️இந்நிலையில், சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கம் தெரிவித்துள்ளது.</div><div><br></div><div>▪️இந்த விடயத்தை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார். சீமெந்தின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</div><div><br></div><div><br></div><div>▪️இதனால் சந்தையில் இரண்டாயிரத்து 100 ரூபாயாக காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, தற்போது, இரண்டாயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-31202332346199823522023-09-18T18:27:00.001+05:302023-09-18T18:27:22.504+05:30ஆபாச படங்கள், வீடியோ வெளியிட்டால் 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை<div><br></div><div><br></div><div>▪️நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>▪️இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் குறித்த அமைச்சரவைப் பத்திரம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</div><div><br></div><div>▪️இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-85746195850671734652023-09-18T18:26:00.003+05:302023-09-18T18:26:37.931+05:30பாராளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...!!! விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு...!!!<div><br></div><div>▪️அநுராதபுரம் மாவட்ட தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று (17) இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</div><div><br></div><div>▪️அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, லஹிரு விளையாட்டு மைதானத்தில் இருந்து அநுராதபுரத்தில் உள்ள இல்லத்திற்கு தனது காரில் பயணித்த அவர் காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி வீட்டை நோக்கிச் சென்றபோது, நிறுத்தப்பட்டிருந்த காரின் இடது புற இருக்கையை குறிவைத்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</div><div><br></div><div>▪️இந்த துப்பாக்கிச் சூட்டில் காரின் பின் பக்க கண்ணாடி சேதமடைந்ததுடன், அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், அவர்கள் கார் ஒன்றில் வந்திருக்கலாம் எனவும், துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</div><div><br></div><div>▪️இது தொடர்பான விசாரணைகள் அநுராதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் அநுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில், அநுராதபுரம் தலைமையக பொலிஸார், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.</div><div><br></div><div>▪️இந்நிலையில், பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய, குறித்த விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</div><div><br></div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-77955554241761242262023-09-18T18:26:00.001+05:302023-09-18T18:26:00.847+05:30திருத்தப்பட்ட வாக்காளர் பதிவு சான்றளிப்பு<div><br></div><div>▪️2023 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட துணை வாக்காளர் பதிவு 2023 (1) வாக்காளர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் சான்றளிக்கப்பட்டது.</div><div><br></div><div>▪️திருத்தியமைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் வரைவு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தமது பெயர்கள் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div> </div><div>▪️18 வயது நிரம்பிய மற்றும் ஜனவரி 31, 2005 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் 2023 ஆம் ஆண்டில் தங்கள் வழக்கமான குடியிருப்பு முகவரியில் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.</div><div><br></div><div> </div><div>▪️2023 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேட்டின் திருத்தம் தொடர்பான வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் (BC படிவங்கள்) ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படவில்லை மற்றும் அந்தந்த கிராம அலுவலர் ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்காளர்களின் தற்போது செல்லுபடியாகும் பட்டியலின் துல்லியத்தை உறுதிப்படுத்த குடும்பத் தலைவர் அல்லது ஒரு பெரியவர் உறுதிப்படுத்த கையொப்பமிட வேண்டும்.</div><div><br></div><div> </div><div>▪️எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எந்தவொரு தேர்தலும் திருத்தப்பட்ட 2023 வாக்காளர் பதிவேட்டைப் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-79407225257277595232023-09-18T18:25:00.001+05:302023-09-18T18:25:27.066+05:30உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானம்?<div><br></div><div>▪️எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>▪️2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தனது முகப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.</div><div><br></div><div>▪️'ஜி77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பான முடிவுகள் இறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-69085397469724173932023-09-18T18:24:00.003+05:302023-09-18T18:24:56.395+05:30ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக்கூட்டம் இன்று ஆரம்பம்<div><br></div><div>▪️ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொது சபைக்கூட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.</div><div><br></div><div>▪️இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பொது சபைக்கூட்டம் இடம்பெறவுள்ளது.</div><div><br></div><div>▪️இந்தநிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க எதிர்வரும் 21ம் திகதி தமது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.</div><div><br></div><div>▪️2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளது.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-88952115860660924352023-09-18T18:24:00.001+05:302023-09-18T18:24:22.316+05:30பயணப்பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது...!!<div><br></div><div>▪️சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடுகம் ஓயாவில் பயணப்பையிலிருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.</div><div><br></div><div>▪️இதன்படி, மாராவில் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</div><div><br></div><div>▪️குறித்த நபர் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பலரிடமும் நிதி மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>▪️இந்த நிலையில் அவர் தனது நிரந்தர முகவரியில் வசிக்காமல் அங்கிருந்து தலைமறைவாக பிரிதொரு பகுதியில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-76901633893666886422023-09-18T18:23:00.001+05:302023-09-18T18:23:36.201+05:302023 ஆசியக் கிண்ண தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள்<div><br></div><div>▪️ இந்தியா தனது 8-வது ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது</div><div><br></div><div>▪️குறைவான (16) பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, ODI-ல் அதிவேகமாக படைத்தவர் என்ற உலக சாதனையை (சமிந்த வாஸுடன்) முகமது சிராஜ் சமன் செய்துள்ளார</div><div><br></div><div>▪️ODI-ல் குறைவான (1002) பந்துகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் (அஜந்தா மெண்டிஸ்க்கு பின்) என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார்.</div><div><br></div><div>▪️ ODI-ல் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைும் படைத்துள்ளார் சிராஜ்.</div><div><br></div><div>▪️ODI கிரிக்கெட்டில் அதிக பந்துகளை (263) மீதம் வைத்து மிகப்பெரிய வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது</div><div><br></div><div>▪️ 6.1 ஓவரில் செய்த இந்தியாவின் ரன் சேஸிங் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக சேஸ் செய்யப்பட்ட 5-வது சிறந்த சேஸிங்காக மாறியுள்ளது</div><div><br></div><div>▪️ ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை (98) பதிவு செய்த அணியாக இந்தியா தொடர்கிறது</div><div><br></div><div>▪️ ஆசிய கிண்ணத்தை 2வது முறையாக வெல்லும் 3-வது இந்திய தலைவராக (தோனி & அசாருதின் உடன்) ரோகித் சர்மா மாறியுள்ளார்.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-74513593946776286282023-09-18T18:22:00.001+05:302023-09-18T18:22:10.826+05:30பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க நடவடிக்கை..!!!<div><br></div><div>▪️பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.</div><div><br></div><div>▪️அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</div><div><br></div><div>▪️கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அது தொடர்பில் 57 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</div><div><br></div><div>▪️கடந்த மாதத்தில் மாத்திரம் 12 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7495493288378991000.post-5455852089005501992023-09-18T18:21:00.001+05:302023-09-18T18:21:25.650+05:30அமெரிக்காவில் விமான விபத்து - 2 பேர் உயிரிழப்பு!<div><br></div><div>▪️அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய செம்பியன்ஷிப் விமான கண்காட்சியில் நடந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.</div><div><br></div><div>▪️விமான கண்காட்சியின் போது தரையிறங்க முற்பட்ட போது இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</div><div> </div><div>▪️இந்த விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.</div>TestingRikashttp://www.blogger.com/profile/02083407064061723157noreply@blogger.com0