( மினுவாங்கொடை நிருபர் )
"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் பிரகாரம், வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலுமிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதற்காக, கடந்த ஆண்டு அல்லது இவ்வாண்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட வெகுசன ஊடகவியலாளர்களிடம் இருந்து மாத்திரம் தகவல்கள் திரட்டப்படவுள்ளன.
இதற்காகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின்
www.media.gov.lk இணையத்தளம் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ளவோ அல்லது அமைச்சுக்கு வருகை தருவதன் மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியும்.
பூர்த்தி செய்த படிவத்தை, மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் 'பணிப்பாளர் (ஊடகம்), தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இல.163, ' எதிசிதி மெதுர ', கிருலப்பனை வீதி, பொல்ஹேன்கொட, கொழும்பு - 05. ' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
இது தொடர்பில், 011-2513645
என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிந்து கொள்ள முடியும் என்றும், அமைச்சின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
விண்ணப்பத்தை Download செய்ய - Click here
( ஐ. ஏ. காதிர் கான் )

