அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்று வெற்றி நடைபோடும் தாருல் ஹசனாத் அகாடமியின் (DHA) மாணவன்.

2000ம் ஆண்டு சமூக சேவகர் அல் ஹாஜ் அபுல் ஹசன் ஹாஜியாரால் முஸ்லிம் சமூக மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனமானது இலாப நோக்கமற்றது. இங்கு இஸ்லாமிய அடிப்படை கல்வியுடன் கூடிய கணக்கிடல் துறைசார் கற்கை நெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 1000 ற்கும் அதிகமான கணக்காளர்களை இந் நிறுவனம் உருவாக்கம் செய்து இந் சமூகத்திற்கு வலுவூட்டியுள்ளது.

அந்த வகையில் இறுதியாக ( 2019 ஜனவரியில் ) நடைபெற்ற இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர்கள் கழகத்தின் (AAT– SL) பரீட்சையில் தோன்றிய எமது மாணவன் முஹம்மது மும்தாஜ் முஹம்மது சாதிக் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சிறப்பு சாதனை பெற்று எமது பாடசாலைக்கும் அவரது பெற்றோருக்கும் பெருமை பெற்று தந்துள்ளார்.

முதலில் அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிப்பதுடன் இம்மாணவனின் வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் 2015ம் ஆண்டு நடைபெற்ற AAT இறுதிக்கட்ட பரீட்சையில் M.I.A.M. அப்கர் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சிறப்பு சாதனை அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தாருல்ஹஸனாத்தின் இரு பிரதான சிறப்பம்சத்தின் முதலாவது ஏதுவெனில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் G.C.E. (O/L) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படையில் இருந்து ஆங்கில மொழியை கற்றுக் கொடுப்பதுடன் AAT மற்றும் G.C.E.
(A/L) பரீட்சையையும் ஆங்கில மொழி மூலம் தோற்றி சாதனை படைப்பதற்கு வழிகாட்டப்படுகின்றனர்.

மற்றுமோர் சிறப்பம்சம் என்னவெனில் புனித திருக்குர்ஆனில் இறுதி 3 ஜூஸ்களை மனனம் செய்வதற்கு வழிகாட்டப்படுகின்றனர். மேலும் இஸ்லாமிய வாழ்வியல் சிந்தனைகளையும் அறிந்து கொள்வதற்கான ஓர் சூழலை இந்நிறுவனம் அமைத்துக் கொடுக்கின்றது.

19 வருடம் பழமை வாய்ந்த இந் நிறுவனமானது இலங்கையின் சப்ரகமு,வ மாகாணத்தின் வரகாப்பொல நகரில் 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இயற்கை அழகுமிகு ஓர் ரம்யமான சூழலில் சகல வசதிகளையும் ( மாணவர் விடுதி, IT கூடம், விளையாட்டு மைதானம் பள்ளிவாசல், வகுப்பறை ) யைக் கொண்டு அமையப்பெற்றல்லது. இங்கு இலங்கையின் தலைசிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு பாடபோதனைகள் நடாத்தப்படுவதனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஆளுமையுள்ள மாணவர்களை உருவாக்க முடிகின்றது.
எமது பாடசாலையில் வருடந்தோரும் இரு முறை (ஜனவரி மற்றும் ஏப்ரல்) மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்படுகின்றர்.


அம்மாணவர்கள் 2 ½ வருடத்திற்குள் AAT யின் 3 படித்தரங்களையும் ஆங்கில மொழி மூலம் சித்தி பெறுவதுடன் G.C.E.
(A/L) பரீட்சையிலும் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிறுவனத்தின் பழைய மாணவர்கள் கணக்கியல் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் கடமை புரிவதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு எமது இணையத்தளமான www.dhlsl.lk இணையத்திற்கு உட்பிரவேசிக்கவும.;

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.