அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (18) மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கறுவாத்தோட்டம், கொம்பனித் தெரு, பொரளை பொலிஸ் பிரிவுகள் மற்றும் களனி பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு என்பனவற்றால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 16 உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாம் அரசாங்கத்தின் அமைச்சு கரட் சாப்பிடுவதில்லை. கீழ்த்தரமான ஊடகப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியானது அரசாங்கம் நீட்டும் அமைச்சு கரட்டுகளை சாப்பிடத் தயாரில்லை என்றும் நாட்டுக்காக கொள்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல காரியங்களுக்கு மட்டும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றக் குழு அமைப்பு மூலம் மாத்திரம் ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் பெரும் சோகத்திலும், அசௌகரியத்திலும் உள்ள வேளையில், ஊடகத்துறையில் இருக்கும் ஒரு சிறு தரப்பால் போலிச் செய்திகளைத் தயாரித்து, பத்திரிகைகளிலும், மறுநாள் பத்திரிகை செய்தியை வாசிக்கும் நிகழ்ச்சிகளிலும் படித்து, மக்களுக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி பற்றிய தவறான கருத்துக்களை பகிர முயற்சிப்பதாகவும், அதனூடாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினர் அதிகார மோக அரசியல் பயணத்தை மேற்கொள்வது போன்ற தவறான செய்திகளை உருவாக்குவதாகவும் அந்த செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் அவர் இன்று (18) தெரிவித்தார்.
1% சேறுபூசும் ஊடகங்கள் செய்யும் சதிகளில் மக்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் சிலர் காக்கைகளுடன் சேர்ந்து சதி செய்து பல்வேறு வதந்திகளை காக்கை இணையதளங்களில் நிறுவி நாட்டின் சாமானிய மக்களை தவறாக வழிநடத்துவதாகவும்,
நாகபாம்பு வெளிப்பட்ட போலி ஊடக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாகை ஊடகத்திட்டத்தின் ஊடாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது களனி ரஜமஹா விகாரையையும், பௌத்த சாசனத்தையும் அற்ப அரசியல் ஏலத்தில் விட்டு அரசியல் இலாபங்களுக்காக செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தின் ஊடாக சுமார் 70 அமைச்சுப் பதவிகளை கைக்கூலிகளுக்கு பகிர்ந்தளிக்கும் சூதாட்டத்தில் நாம் பங்குக்கொள்ளமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை
- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கண்டியில் தெரிவித்தார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (19) கண்டியில் தெரிவித்தார்.
அப்படியொரு முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.
இன்று (19) கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இருக்க வேண்டும். அவர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்த நாட்டிற்கு சேவை செய்ய வந்தார். எனவே, அவர் போராளிகளுக்குப் பயந்து வெளிநாடுகளில் ஒளிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது. இது அவரது மனித உரிமை மீறலாகும்"
எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர் இந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இடைக்கால அரசாங்கம் அல்லது இடைக்கால நிர்வாகத்தை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தோம். ஏனெனில், இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது. நாடு டொலர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.
இன்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாராளுமன்றத்தில் 145 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் பொதுஜன பெரமுன 125க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் அந்த பெரும்பான்மை பெரும் பலமாக உள்ளது.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையானோர் இன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கடந்த அரசாங்கத்தின் போது ஜனதா விமுக்தி பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கூட்டணி போன்ற கட்சிகள் தற்போதைய ஜனாதிபதியுடன் இருந்தன. எங்களை விட ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது அவர்களுக்கு இலகுவானது.
இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறினோம், நீங்கள் அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் நல்லெண்ண அடிப்படையில் ஆதரவளிக்கவும். அதற்காக நாம் எமது அமைச்சினை விட்டுக்கொடுக்கவும் தியாகங்களைச் செய்யவும் தயாராக இருக்கின்றோம்.
உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களை நியமிக்கும் நோக்கில் பொருத்தமான நபர்களை நியமிக்கும் உரிமையை கட்சிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களை நியமிக்கும் நோக்கில் பொருத்தமான நபர்களை நியமிக்கும் உரிமையை கட்சிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முனீரா அபூபக்கர்
2022.08.19