ரமழான் மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும்  நிறைந்ததாக அமையப்  பிரார்த்திக்கிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கருணையும், நற்செயல்களும் நிறைந்த, தவறுகள் மன்னிக்கப்படும், புனிதமிகு அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மிகப்பெரும் மகிழ்ச்சிகர நிகழ்வை  நினைவுபடுத்தும் அருள் மிகு புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு,  அப்புனிதமிகு மாதத்தை அடைந்துகொள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நான் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் அடைந்துகொண்ட  முதல் புனிதமிகு ரமழான் மாதம் இதுவாகும்.

இப்புனிதமிகு மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் அருளும் நிறைந்ததாக அமையப் பெற்று, இப்புனிதமிகு மாதத்தினை அனைவரும் அடைந்து, நோன்பு நோற்று நற்கிரியைகளில் ஈடுபடும் பாக்கியத்தை அடையவும், அனைவரது நற் செயல்களையும் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்" என்றார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை, மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், ஏப்ரல் 25 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு தினம் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடியுள்ளது.

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை களமிறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கணிசமாக குறைக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவிலிருந்தும், 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவிலிருந்தும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விலை மாற்றம் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

மாவடிப்பள்ளியில் இலைக்கறி பறித்துக் கொண்டிருந்தவர் முதலை தாக்குதலுக்கு பலி

 ஐ.எல்.எம். நாஸிம்

நேற்று மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி இலைக்கறி பறித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளார். சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த 61 வயதையுடைய 04 பிள்ளைகளின் தந்தையாகிய இராசாப்பு சௌந்தராஜன் என்பரை முதலைத் தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மரணம் குறித்து கல்முனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் முதலைத் தாக்குதலில் உயிர் இழந்தவருக்கு நஸ்டஈடு கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை இன்று காலை 10.10 மணியளவில் பார்வையிட்டனர்.




உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (23) விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி இன்று (23) காலை 10 மணிக்கு அனைத்து அரசியல் கட்சி செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாத விவகாரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.


தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிப்பதா அல்லது புதிய தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று (23) முடிவு எடுக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Blogger இயக்குவது.