கொடியாகும்புரையை வசிப்பிடமாகவும் மாவனல்ல பத்ரியா மத்திய கல்லூரில் பௌதீகவியல் ஆசிரியராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்த M.R.M Rizlan (B.sc Hons) ஆசிரியர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து நலன் விரும்பிகள் பலரால் பணம் திரட்டப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனளிக்காததால் மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
இதற்கு மேலும் 5,000,0000 (50 இலட்சம் ) ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக தங்களால் இயன்ற உதவியை இச் சகோதரனுக்கு செய்து உதவுமாறு மிகவும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் மேலும் பரகத் செய்து நோயற்ற சுகமான வாழ்க்கையை தந்தருள்வானாக.. ஆமீன்.
இந்நிலையில் நேற்றைய தினம் ட்விட்டர் பதிவாளர் ரமழான் ஈஸாவின் பதிவினை (Tweet) பார்த்த மாற்று மத சகோதரர் ஒருவர் உடனடியாக ஆசிரியர் ரிஸ்லானின் சிகிச்சைக்காக ரூபா 500,000 இனை வழங்கியுள்ளார் (ஸ்கிரீன்கள் இணைக்கப்பட்டுள்ளன)
' Your small contribution can save a life'
Contact - Mr. M.R.M Rifry (Father) 0762314704
Bank Account Details - M.R.M Rizlan People's Bank Kotiyakumbura A/C No - 355 2001 1000 5378
M.R.M Rizlan Bank of Ceylon Kotiyakumbura A/C No - 82855082
அமெரிக்காவின் முதல் பெண், ஆசிய வம்சாவளி, ஆப்பிரிக்க வம்சாவளி துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிசுக்கு முதல் லத்தீன் உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றார்.
அதிபர் ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகமாக கேப்பிட்டால் வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்னர் டிரம்ப் ஆதரவாளர்களால் இங்குதான் வன்முறை நடத்தப்பட்டது.
டொனால்டு டிரம்ப் புறக்கணிப்பு
வழக்கமாக புதிய அதிபரை முன் வாசல் வழியாக பதவியை இழக்கும் அதிபர் வரவேற்பார். ஆனால், இந்நிகழ்வில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.
1869க்கு பின் தமக்கு பின் பதவியேற்பவரின் நிகழ்வில் கலந்துகொள்ளாத முதல் அதிபர் டிரம்ப் ஆவார்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டு வாஷிங்டன் டி.சி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சமூக இடைவெளி விதிமுறைகளும் அமலில் இருந்தன.
பதவியேற்பு விழாவை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.Facebook பதிவை கடந்து செல்ல, 1
Facebook பதிவின் முடிவு, 1
முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், மற்றும் ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஆகியோர் பைடனின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றார்கள்.
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் நிகழ்வில் பங்கேற்றவர்களை ஜோ பைடன் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அமெரிக்க தேசிய கீதத்தை பாடகி லேடி காகா பாடினார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
கவிஞர் அமண்டா கார்மன்
கறுப்பினத்தைச் சேர்ந்த இளம் பெண் கவிஞர் அமண்டா கார்மன் இந்த நிகழ்வில் உரையாற்றினார். 22 வயதாகும் இவர்தான் அதிபர் பதவியேற்பு விழா ஒன்றில் உரையாற்றியவர்களிலேயே இளம் வயது நபர் ஆவர்.
அதிபரான பின் ஜோ பைடன் முதல் உரையில் பேசியது என்ன?
பட மூலாதாரம்,REUTERS
"இது அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள்" என்று அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், பதவியேற்ற பின்பான தன் முதல் உரையில் தெரிவித்தார்.
"பல சோதனைகளை சந்தித்துள்ள அமெரிக்கா, சவால்களில் இருந்து மீண்டுள்ளது. இன்று என் வெற்றியை அல்ல, ஜனநாயகத்தை கொண்டாடுவோம்" என்று அவர் கூறினார்.
"ஜனநாயம் எவ்வளவு விலைமதிப்பானது என்று நாம் மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம். ஜனநாயகம் சற்று பலவீனமானது, ஆனால். இன்று ஜனநாயகம் வென்றிருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
"சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் (கேப்பிட்டோல்) வன்முறை வெடித்தது. ஆனால், இங்கு நாம் ஒரே நாடாக, கடவுளுக்கு கீழ் ஒன்றிணைந்து இருக்கிறோம். கடந்த இரண்டு தசாப்தங்களாக எப்படி நடந்ததோ அப்படி இன்றும் அமைதியான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது."
அதிபராக பதவியேற்ற பின் பேசிய முதல் உரையில், பெண் துணை அதிபரான கமலா ஹாரிஸ் குறித்தும் அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
"180 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வாக்களிக்கும் உரிமை கேட்டு பேரணி நடத்தியபோது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்னர். ஆனால், இன்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக இங்கு கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். எதுவும் மாறாது என்று கிடையாது" என்று அவர் தெரிவித்தார்.
எனக்கு வாக்களிக்காதவர்களையும் நான் பாதுகாப்பேன் என உறுதி கூறுகிறேன் என்று அவர் பேசினார்.
பர்புள் நிறம் அணிந்த முக்கிய பிரமுகர்கள் - என்ன காரணம்?
பட மூலாதாரம்,EPA
புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் பர்புள் நிற ஆடையை அணிந்திருந்தனர்.
இரு கட்சியும் ஒன்றிணைக்கும் வண்ணமாக பர்புள் நிறம் பார்க்கப்படுகிறது. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் நிறமான முறையே சிவப்பு மற்றும் நீல நிறத்தை சேர்த்தால் பர்புள் நிறம் வெளிப்படும்.
இந்த பதவியேற்பு விழாவின் தீம் "அமெரிக்கா யுனைட்டட்" என்பதை குறிக்கும் விதமாகவே பலரும் பர்புள் நிற ஆடையை அணிந்து வந்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட, இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.
மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்தில், அண்மையில் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கோ மற்றும் அப்பெண்ணின் குடும்ப உறவினர்களுக்கோ கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார். மரணித்த பெண்ணின் குடும்ப உறவினர்களுக்கு மேற்கொண்ட பீ.சீ.ஆர். பரிசோதனையின் பின்னரே, இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், இப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொருவரின் உடலை அடக்கம் செய்திருப்பது தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸில் கிராம சேவை அதிகாரியினால் கடந்த 8 ஆம் திகதி இரவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டையடுத்து இது தொடர்பிலான அறிக்கையொன்றினை குடும்பத்தார் மூலமாகப் பெற்றுத்தருமாறு, மினுவாங்கொடை பொலிஸாரினால் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வரவழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர், மரணித்து அடக்கம் செய்யப்பட்ட குறித்த பெண்ணின் குடும்ப உறவினர்களிடம் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோதே, "எவருக்கும் கொரோனா தொற்றில்லை" என உறுதிப்படுத்தியுள்ளார். இதனை மையமாக வைத்து, "மரணித்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதனால், இவரை அடக்கம் செய்ததில் தவறில்லை" எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, "மரணித்த பெண் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவராகவோ அல்லது கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவராகவோ இருக்கவில்லை. இப்பெண் நீண்டகாலமாக சுகயீனமாக இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே இவர் மரணித்துள்ளார்" என்ற விபரங்கள் அடங்கிய விரிவான தகவல்களும் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்டு, இதன் அறிக்கையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு பெற்றதாகவும், பிரதேச சுகாதாரப் பரிசோதகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இன்று (15) நான்கு கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக உயர்வடைந்துள்ளது.
விபரம்:
கிரிபத்கொடை பிரதேசத்தை சேர்ந்த 90 வயதான பெண் ஒருவர் இன்று ஐடிஎச் வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
கொழும்பு 10 இனை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் இன்று ஹோமாகமை வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் இரனவிலை சிகிச்சை நிலையத்தில் கடந்த 13 ஆம் திகதி மரணித்துள்ளார்.
கொழும்பு 15 இனை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.