தேர்தல் வாக்களிப்பிற்காக சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பயண வசதி கருதி, இம்மாதம் 31ஆம் திகதி முதல், எதிர்வரும் ஓகஸ்ட் 04ஆம் திகதி வரை 06 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக, மேலதிக புகையிரத பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 31ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கொழும்பு, புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் புகையிரத நிலையம் வரையும், இரவு 7.35 மணிக்கு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நானுஓயா புகையிரத நிலையம் வரையும், இரவு 7.00 மணிக்கு மருதானை புகையிரத நிலையத்திலிருந்து பெலியத்த புகையிரத நிலையம் வரையும் விசேட புகையிரத சேவைகள் இடம்பெறும்.

இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி காலை 8.10 மணிக்கு நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து  கொழும்பு, புறக்கோட்டை புகையிரத நிலையம் வரையும், காலை 6.45 மணிக்கு பெலியத்த புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரையும், அதிகாலை 3.00 மணிக்கு அநுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு, புறக்கோட்டை புகையிரத நிலையம் வரையும் புகையிரத சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.