கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அமுலாகும் என்று தெரியவருகிறது.
மேலும் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் மினுவாங்கொட, திவுலபிடிய மற்றும் வெயாங்கொட பொலிஸ் பிரிவுகளில் குறித்த ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.