ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெ வ வினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலத்தை 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடித்தல்
2021 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையை வழங்குவதற்கான அடிப்படை அலுவல்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி 2205ஃ17 இலக்கத்தின் கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்திரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தை றறற.னபi.பழஎ.டம என்ற அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அல்லது றறற.நெறள.டம என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் (னழறடெழயன) செய்துகொள்ள முடியும்.

இதே போன்று 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மேலும் அறிவிக்கின்றோம்.

நாலக கலுவெவ
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.