எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட  அனுமதிக்கப்படாது என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பாக, விவசாய அமைச்சு மற்றும் அதன் இணைந்த இராஜாங்க அமைச்சுகளுடன் நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இவ்வாறு தெரிவித்தார்.

 ஒவ்வோர் அமைச்சுக்கும் வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை தவிர, ஒவ்வோர் அமைச்சும் சமர்ப்பிக்கும் உற்பத்தி பொருளாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், நிதி அமைச்சர் கூறினார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.