இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன.

கடனட்டைகளுக்கு வழங்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 36% வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் விதிக்கப்பட்ட வரம்புகளை நீக்க தீர்மானித்தது.

அதன்பின், வட்டி விகிதங்கள் ஏற்கனவே இருந்த 18% வீதத்திலிருந்து 24% வீதமாகவும், பின்னர் 30% வீதமாகவும், இப்போது மீண்டும் 36% வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

(தமிழன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.