கட்டுமாண துறைக்குத் தேவையான சீமெந்து, இரும்பு போன்ற மூலப் பொருட்களின் விலை தொடர்பில் நிலவும் பிரச்சினையை தீர்க்க எதிர்வரும் வாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்குவது மிகவும் அவசியம் என்றும், நாட்டில் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு நிலையை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக அமைச்சில் (1) நடைபெற்ற உணவுப் பாதுகாப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வரலாற்றில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதுண்டு. உணவு இருப்பை வைத்து நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் விவசாயம், கால்நடைகள் மற்றும் மீன்பிடித் துறைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.