ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறு

zahir
By -
0


(இஸட்.ஏ.றகுமான்)

ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலையின் 2021 (2022) உயர்தரப் பரீட்சை முடிவு சிறந்த நிலையில் காணப்படுகிறது. பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 62 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 36 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். 

அந்தவகையில் மருத்துவத்துறைக்கு - 01 மாணவரும் பொறியியல் துறைக்கு- 02 மாணவர்களும் உயிரியல் மற்றும் பௌதிகவியல் துறைக்கு (டீளுஉ) - 23 மாணவர்களும் கலைப்பிரிவிற்கு - 08 மாணவர்களும் வர்த்தகப்பிரிவிற்கு - 02 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்.

பலதரப்பட்ட சவால்கள் நாட்டின் நெருக்கடிகளுக்கு மத்தியில் பரீட்சை எழுதி சித்தியடைந்த  மாணவர்கள் அதற்கு உதவிய பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் என அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)