நாவலப்பிட்டி, இங்குறு ஓயா பகுதியில் அலவாங்கால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கணவனும் அவரது மனைவியும் அலவாங்கால் தாக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

அலவாங்கு தாக்குதலுக்கு இலக்கான நபர், ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.



தாக்குதலில் காயமடைந்த அவரது மனைவி நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.