மீண்டும் வைரஸ் பரவல் - முகக்கவசம் அணியுமாறு வேண்டுகோள்!

இக்காலத்தில் பரவி வரும் வைரஸ் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணியுமாறு  உடல் நோய்களில் நிபுணரான வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்படி, வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் தும்மல் மற்றும் இருமலின் போது வாயை சரியாக மூடிக் கொள்ள வேண்டும் என்றும் மற்றவர்கள் வைரஸ் நோய்களைத் தடுக்க முடிந்தவரை முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தொற்றாத நோயாளர்கள் மற்றும் சிறு பிள்ளைகள் அதிக சிக்கல்களுக்கு ஆளாகலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் சுவாச நோய்கள் மற்றும் வைரஸ் நோய்கள் ஓரளவு அதிகரித்து வருவதாகவும், கொரோனா வைரஸால் மக்கள் ஆரோக்கியமாக இருந்ததாகவும், ஆனால் இப்போது மக்கள் படிப்படியாக அவற்றை மறந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.