இனி இரவு இருக்காது! பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக்கூடும்:பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு !பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது, இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும்.மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் என பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளமை தெரியவந்துள்ளது.3000 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும்

மேலும், உலகம் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் இன்னும் 3000 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதையும் கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாபா வங்கா இதுவரை கணித்துள்ள பல சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில்,தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

2100க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.2023க்கான கணிப்புகள்

தற்போது 2023ஆம் ஆண்டு குறித்து பாபா கணித்துள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூமியின் வட்டப்பாதையில் மாற்றம், அணு உலை வெடிப்புகள் போன்ற சில விடயங்களை கணித்துள்ள பாபா, சில அறிவியல் பூர்வ கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும் கூறியுள்ளார்.

அவற்றில் ஒன்று, ஆய்வகங்களில் குழந்தைகள் உருவாக்கப்படுதல் குறித்ததாகும். அதாவது, எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளின் தோலின் நிறம் முதலான சில குணாதிசயங்களை பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யமுடியுமாம். மறுபக்கத்தில், பாபா கணித்துள்ள விடயங்களில் மோசமானவை, 2023இல் அணு உலை வெடிப்பு ஒன்று நிகழும் என்பதாகும். மேலும், பூமிக்கு ஏலியன்கள் வருகை தரும் என்றும், அதனால் பல மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும், உலகம் முழுவதும் இருளில் மூழ்கும் என்றும் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் இருளில் மூழ்கலாம் என குறிப்பிட்டுள்ளது, அவர் கணித்த சூரியப் புயலால் கூட உருவாகலாம் என கருதப்படுகிறது. இதுபோக, சூரியனில் இருந்து வெடித்து வெளியாகும் மின் தாக்குதலால் பூமி பாதிப்புக்குள்ளாகும் என்று கணித்துள்ளார்.

கடைசியாக, ஒரு பெரிய நாடு உயிரி ஆயுதங்களையும் மனிதர்கள் மீது பயன்படுத்தி சோதனை செய்யும் என்றும், அதனால், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக்கூடும் என்றும் கணித்துள்ளார்.பாபா வங்காவின் பிரபலமான கணிப்புகள்

பாபா வங்கா உலக அழிவைப் பற்றியும் கணித்துள்ளார். உலகம் 5079 ஆம் ஆண்டில் அழியும்.

வெட்டுக்கிளிகள் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவைத் தாக்கக்கூடும். இது தவிர, பஞ்சம் போன்ற பேரிடர் பிரச்சினையையும் நாடு சந்திக்க நேரிடலாம்.

பூமியின் சுற்றுப்பாதை 2023 ஆம் ஆண்டு மாறும். அதே நேரத்தில், விண்வெளி வீரர்கள் 2028 ஆம் ஆண்டில் சுக்ரன் கிரகத்தை அடைவார்கள்.

2046-ம் ஆண்டில், மனிதர்கள் 100 வயது வரை வாழத் தொடங்குவார்கள்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு, மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள்.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் தாக்குதல்.

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார்.

2016ம் ஆண்டு ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வலிமை பெறும்.

ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும்.

பாபா வங்கா 2022 ஆம் ஆண்டு குறித்த சில கணிப்புகளில், இதுவரை இரண்டு கணிப்புகள் உண்மையாகி உள்ளது.

இதில் முதலாவதாக அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவை உண்மையாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.