மே மாத மின் உற்பத்தி தொடர்பில் கஞ்சன விளக்கம்

நுரைச்சோலை மின் நிலையத்தை இயக்குவதற்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது பதிவில் மின் உற்பத்தி நிலையம் இயங்குவதற்கு எத்தனை நிலக்கரி சரக்குகள் தேவை என்பதை விரிவாக விவரித்துள்ளார்.

தேவையான இருப்புக்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், 23வது நிலக்கரி கப்பல் தற்போது இறக்கப்பட்டுள்ள நிலையில், 24, 25 மற்றும் 26வது நிலக்கரி கப்பல்கள் புத்தளத்தில் தரித்து நிற்கும் நிலையில், தற்போது இறக்குவதற்கு காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 27, 28 மற்றும் 29 நிலக்கரி கப்பல்கள் பரிந்துரைக்கப்பட்டு மே 01 ஆம் திகதிக்கு முன்னதாக வரவுள்ளன என்றும் அதே நேரத்தில் 30வது நிலக்கரி கப்பல் பரிந்துரைக்கப்பட உள்ளதாகவும் மே முதல் வாரத்தில் வர திட்டமிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.