ரொமானியா அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சம்மாந்துறை இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார்
அம்பாரையில் சம்மாந்துறையில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் அவர்களுக்கு சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்கான ரொமானியா அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
Ministry of Research, Innovation & Digitalization, Romania இணைந்து இரு வருடங்களாக Zoom ஊடாக புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு பணியாற்றியமைக்காகவும் இவருக்கு இந்த விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது