வில்பத்து காடழிப்பு சம்பந்தமான அறிக்கை பாராளுமன்றத்துக்கு

www.paewai.com
By -
0

வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்று, பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடிய போது, பிரதி சபாநாயகர் இது தொடர்பில் சபைக்கு அறிவித்துள்ளார். 

வில்பத்து தேசிய வனத்தை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது. 

இந்த அறிக்கையின் பிரதி ஒன்றை ​பாராளுமன்றத்திற்கு பெற்றுக் கொள்வதற்காக கடந்த 22ம் திகதி சபாநாயகரால் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அதன்படி அந்த அறிக்கையின் பிரதி நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சபையில் அறிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)