ஒழுக்க விதிகளை மீறிய உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் SLFP

Rihmy Hakeem
By -
0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய மக்கள் பிரநிதிகளுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைகளை விரைவுபடுத்த அந்த கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. 

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (26) கூடியது. 

இதன்போது சுதந்திரக் கட்சியின் பல்வேறு பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டது 

அதன்படி, சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக லசந்த அழகியவன்ன சுதந்திரக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க வகித்த சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமாரா திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் வெற்றிடமாகியுள்ள பல பதவிகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

(adaderana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)