ஆராயப்பட வேண்டிய இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையிலான தொடர்புகள்

Rihmy Hakeem
By -
0
இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையிலான  தொடர்புகள் மிகவும் நெருக்கமானவை. நில அமைப்பு, சுற்றுச் சூழல், கட்டங்கள் பண்பாடு வாழ்வியல் என்று பட்டியல் நீண்டு செல்கிறது.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த போது பெரும் சூபிகளான குஞ்சலி மரிக்கார்கள் (நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷாஹுல் ஹமீத் மீரான் சாஹிப் றஹ் அவர்களின் மாணவர்கள்) இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்கு சீதாவக்க இராஜ்ய மன்னருக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

கேரளாவின் கண்ணூர் நகரில் இருந்து இலங்கை வந்த செய்யித் புகாரி தங்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு உதவியதோடு, இந்தோனேசியவில் டச்சுக்காரருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

செய்யித் ஜிப்ரி தங்கள், அப்துல் ரஷீத் தங்கள்  போன்ற அறிஞர்களும் ஆன்மீக ரீதியில் இலங்கையில் பங்களிப்புக்களை வழங்கியவர்கள் ஆவர். இரு தரப்பு  உறவுகள் மேலும் விரிவாக ஆராயப்படுவது அவசியமாகும்.

(பஸ்ஹான் நவாஸ்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)