திருகோணமலை மாவட்டத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்று வைத்தியதுறைக்குத் தெரிவாகியிருக்கும் மூதூர் நூரானியாவைச் சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் இன்று (28. 12. 2019) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ அரூஸ், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ பைசர், முன்னாள் உதவிச் செயலாளர் ஹுசைதீன் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.





