நான்கு நீதிமன்றங்களின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் நிட்டம்புவையில் கைத்துப்பாக்கியுடன் கைது

Rihmy Hakeem
By -
0
நிட்டம்புவ பிரதேசத்தில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதாகியுள்ளார். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று தெரிய வருகிறது. 


கம்பஹா பிரிவின் குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரை விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே கம்பஹா, ஹெட்டிபொல, மினுவாங்கொட, அத்தனகல்ல ஆகிய நீதிமன்றங்கள் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜராக்கப்படவுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)