தற்போதைய நாடாளுமன்றத்தில் இன்று (20) இடம்பெறும் அமர்வே இறுதி அமர்வு என, சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய நாடாளுமன்றத்திற்கு 41/2 வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரான இறுதிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்காலப் பாராளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்களின் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும்” என்று அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


