இரண்டு மாகாணங்களிலும், மூன்று மாவட்டங்களிலும் கடுமையான உஷ்ணம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், வடமேல் மாகாணங்களிலும், காலி,மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலும் எதிர்பார்க்கப்பட்டதை விட கடுமையான உஷ்ணம் காணப்படுகிறது.
இந்தப் பிரதேசங்களில் வசிப்போர் கூடுதலாக நீரை அருந்துவது அவசியமாகும். நிழல் தரும் இடங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
அரசாங்க தகவல் திணைக்களம்

