பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக் கொலை

Rihmy Hakeem
By -
0
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் காயங்களுடன்  பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸார் அடித்துக் கொலை செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Tamilmirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)