கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நாளை பகல் 12 முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு! (முழு விபரம்)

Rihmy Hakeem
By -
0
ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும் விதம்



கொழும்பு கம்பஹா புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

இந்த மாவட்டங்களுக்கு நாளை மதியம் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு 27ஆம் திகதி மதியம் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும்.

ஏனைய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

பின்னர் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)