யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 25 பேர் கைது!

Rihmy Hakeem
By -
0


யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)