நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அதிகமானோர் எதிர்வரும் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதற்கு சஜித் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சஜித் தலைமையிலான் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வேறொரு சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அதனை விரைவில் அறிவிப்பதாகவும் கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்பி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வினை ரணில் தரப்பு புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

