இத்தாலியில் இருந்து வருகை தந்த அதிகமானவர்கள் புத்தளத்தில்

Rihmy Hakeem
By -
0
இத்தாலியில் இருந்து வருகை தந்த இலங்கையர்களில் அதிகமானவர்கள் புத்தளம் மாவட்டத்திலே இருப்பதாகவும் அவர்கள் எப்போதும் சுகாதார அமைச்சு வழங்கும் நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறும் வைரஸ் பரவாதவாறு செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அததெரண

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)