கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு காலம் நீடிப்பு

Rihmy Hakeem
By -
0

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் (24) செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே தினம் பி.ப. 2.00 மணி முதல் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் திங்கள் (23) காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்றும், அதே தினம் பி.ப.2.00 மணி முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)