பொதுத் தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை

  Fayasa Fasil
By -
0
பொதுத் தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை  
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் அறிக்கை ஒன்றை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் வௌியிட்டுள்ளார்.

நாட்டிலே தற்போது நிலவுகின்ற கொவிட் - 19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும் என அவ் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயத்தில் முற்றுமுழுதாக தமது பங்களிப்பினை வழங்குவதற்கு நாம் தயாராக உள்தாகவும், மக்களுடைய பாதுகாப்பிற்கு அதியுச்ச கரிசனை வழங்கப்பட வேண்டும் என்பதாலும் இவ் அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாத காரணத்தாலும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலை பிற்போடுமாறு தாம் கோரிக்கை விடுப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)