கொரோனா வைரஸ்: இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி பணிகளில் மாற்றம்

  Fayasa Fasil
By -
0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 133 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அனில் ஜாசிங்க
Image captionஅனில் ஜாசிங்க
இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருபவர்களில் 9 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்கள் அனைவரும் நாட்டிலுள்ள 14 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, நாடு முழுவதும் சுகாதார பரிசோதகர்களால் 4,405 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.
அவர்களில் 2769 பேர் இலங்கையர்கள் எனவும், 1120 பேர் சீன நாட்டு பிரஜைகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1700 பேர் வரை தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இவர்களில் 8 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
கர்ப்பிணிதாய்மாருக்கான பரிசோதனைகள் இடைநிறுத்தம்?
கர்ப்பிணிதாய்மாருக்கான பரிசோதனைகள்படத்தின் காப்புரிமைCARL COURT/GETTY IMAGES
கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கிறார்.
குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சிசுக்களுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 
நன்றி : பிபிசி 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)