தெற்கு அதிவேக பாதையிலுள்ள 110 Mile Post பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் தீப்பற்றியுள்ளது.
இன்று சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொட்டாவையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை பயணம் செய்யும் இந்த பஸ் வண்டியிலுள்ள பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்வத்திற்கான காரணம் பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு என தெரியவருகிறது.

