களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது (விபரம்)

Rihmy Hakeem
By -
0
களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் (11) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை முதல் மறு அறிவித்தல் வரை, இரவு 8.00 இல் இருந்து அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளுடன் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)