மட்டக்களப்பில் 4 ஆசனங்களை பெற ஆதரவு தாருங்கள் - சம்பந்தன்

Rihmy Hakeem
By -

மட்டக்களப்பில் அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர சபை மண்டபத்தில் நேற்று (29) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மட்டக்களப்பில் 4 ஆசனங்களை வெற்றி பெற தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் நாங்கள் தேர்தலுக்காக உழைத்த கட்சி அல்ல எனவும் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

(அததெரண)