வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

www.paewai.com
By -
0

இன்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த பேருந்து வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

நேற்று (11) போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)