முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுமார் 06 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்க அவர் இன்று (12) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.