மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ளவர்களுக்கு இம்முறை புத்தளத்திலேயே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள 6,275 பேர் வாக்களிப்பதற்காக புத்தளத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை புத்தளம் மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார உறுதிப்படுத்தினார்.