கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஏ.எல். பரீட்சை நடவடிக்கைள் வெற்றிகரமாக நடாத்த முடிந்துள்ளது - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Rihmy Hakeem
By -
0

 



2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை நடவடிக்கைகள் இன்றுடன முடிவடைகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பரீட்சை நடவடிக்கைககளை வெற்றிகரமாக நடத்த முடிந்ததாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

2548 பரீட்சை மத்திய நிலையங்களில் 362,824 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றினர்..

பரீட்சையை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய பரீட்சை மத்திய நிலையங்களின் மேற்பார்வையாளர்கள், பொலிசார், சுகாதார பிரிவினர், பிரதேச சுகாதார அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம், தனியார் பஸ் சேவைகள் ஆகியவற்றுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் தெரிவித்தார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)