கொழும்பில் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தீர்மானம் - மேயர் ரோசி

Rihmy Hakeem
By -
0

 


கொழும்பு மா நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் திருமதி ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

கூடுதலான குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொருட்களை வழங்க தனியார் துறையின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)