இன்றைய தினம் (10) இரு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் பதிவான இரு மரணங்களில், முதலாவது நபர் கொழும்பு 02 இனை சேர்ந்த 66 வயதுடைய பெண் என்பதுடன் இவர் ஹோமாகம வைத்தியசாலையில் இன்று மரணமடைந்துள்ளார்.
இரண்டாவது நபர் வெலிகமையை சேர்ந்த 54 வயதுடைய பெண் என்பதுடன், டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணித்துள்ளார்.