மேலும் பத்து பிரதேசங்கள் லொக்டவுன் செய்யப்பட்டன!

Rihmy Hakeem
By -
0

 


இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எஹலியகொட பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மினன்ன, விலேகொட, யகுதகொட, அஸ்ககுல வடக்கு மற்றும் போபத்த ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கொடகவெல பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ரக்வான நகரம், ரக்வான வடக்கு மற்றும் தெற்கு, முஷிம்புல மற்றும் கொட்டல ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)