மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டம் செயற்படுமா? - முஜிபுர் ரஹ்மான் எம்பி

Rihmy Hakeem
By -
0

 


இன்று(05) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள்.

ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த 2019 ஏப்ரல் 29 ஈஸ்டர் தாக்குதல் பல உயிர் மற்றும் உடமைகள் இழப்புக்கும் கரணமாக இருந்தது.

தாக்குதலை வைத்து நாட்டில் பாரிய இனவாதம், வர்க்க வாதம் ஏற்பட்டு இன்றும் அதன் தொடர்ச்சி நீடித்துள்ளது.இதற்கு உரம் ஊட்டக்கூடியவர்கள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில்,தாக்குதலை தடுக்க முடியாமல் போனோர்கள் குறித்த ஒரு தரப்பினர் குறித்த விடயங்கள் தான் வெளியிடப்பட்டுள்ளன.இதையும் தான்டிய ஒர் முன்னேற்றகர மட்டத்திலான அறிக்கையைத் தான் சகலரும் எதிர் பார்த்தனர்.

இதனால் தான் இதை சம்பூரணமற்ற அறிக்கை என்று கூறுகிறோம்.

இத் தாக்குதலால் ஒரு பக்கம் கத்தோலிக்கர்களும் மறுபக்கம் முஸ்லிம்களுக்குமே பாதிப்புக்கள் ஏற்பட்டன.இதன் உன்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். முன்னால் அமைச்சர்கள் பலரின் பெயர்கள் இதனோடு தொடர்பு படுத்தப்பட்டது.இன்று அவை உண்மையல்ல என்று நிரூபணமாகியுள்ளது.

ரவி செனவிரத்னவின் சாட்சியங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. நேரடியாக வாய் மொழி மூலமாக குறிப்பிடாமல் எழுத்து மூலம் சாட்சியம் வழங்கினார்.அவரின் அந்த பிரதான சாட்சியங்கள் குறித்து அறிக்கையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.இது முக்கியமான சாட்சியம்.இவை வெளிப்படுத்தப்பட வேண்டும். இதைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும்.

சஹ்ரான் தொடர்பான சகல விசாரணைகளையும் முன்னெடுத்த நாலக சில்வாவை,நாமல் குமாரவின் வாக்கு மூலத்தைக் கொண்டு கைது செய்தனர்.அவ்வாறு நாமல் கூறிய குற்றச்சாட்டு இன்று எங்குள்ளது.இன்று நாமல் குமார விசாரணைக்குட்படுகிறாரா? விசாரணைகளை முன்னெடுத்த நாலக சில்வாவை இவ்வாறு நாமல் குமார மூலம் தடுத்தது யார்? பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பிய அவர்,தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனதன் தொடர்பான ஒரு பக்க குற்றச்சாட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த அரசாங்கம் அவருக்கெதிராக சட்டம் செயற்படுமா? என்ற சந்தேகமுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)